2025 ஜூன் 28, சனிக்கிழமை

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வ​ரை பொலிஸார் ​கைது செய்துள்ளனர்.

27 தொடக்கம் 30 வரையான வயதுகளையுடைவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பிலியந்தலை, கொஹூவலை, தலங்கம, மிரிஹான, கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருள்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் ​பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்க​ளை இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .