2025 ஜூன் 18, புதன்கிழமை

கொள்ளை: 17 பேர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த உடமைகள், வாகனங்களைத் திருடியக் குற்றச்சாட்டில், 2 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (03) இரவு, அவ்வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், 3 வாகனங்களையும் இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது, வீட்டில் யாரும் இருக்கவில்லையென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சீதுவ பொலிஸார், குளியாப்பிட்டி, உடுபத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, இன்று (04), நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .