Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 10 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளில், மாலை 4 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது என, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வௌ்ளவத்தை, தெஹிவளை- கல்கிஸ்ஸ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை, சொய்சாபுர, முல்லேரியா, பெலவத்த ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு - 4 மற்றும் கொழும்பு - 5 ஆகிய பகுதிகளுக்குக் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் தெஹிவளை வரையான நீர்விநியோகக் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக, இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று, சபை மேலும் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago