2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கோட்டாவுக்கு எதிராக மீண்டும் அமெரிக்காவில் மனுதாக்கல்

Editorial   / 2019 ஜூன் 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 8 மனுக்களை தமிழர்களும் இரண்டு மனுக்களை சிங்களவர்களும் செய்துள்ளதாகவும், இதில் 3 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உண்மை மற்றும் நீதி தொடர்பான சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றுடன் இணைந்தே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2005- 2015ஆம் ஆண்டு  காலப்பகுதிகளில் கோட்டாபய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றியப் போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பாகவே இவருக்கு எதிராக மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .