2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாவுக்கு முன்னாள் போராளிகள் ஆதரவு

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.விஜயரெத்தினம்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ​மேலும் தெரிவித்த அவர், நாட்டுக்கு ஆளுமையுள்ள தலைவரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அவருக்க ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சி என்ற வகையியிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்மக்கள் நலன் சார்ந்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X