2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சகல மதங்களுக்கும் ஓர் அ​மைச்சை உருவாக்கவும்

Editorial   / 2019 மே 14 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு அமைச்சை கொண்டு நடத்துவதை விட , முன்னரைப் போலவே சகல மதங்களுக்கும் ஒரே அமைச்சை உருவாக்குமாறு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மதங்களின் பெயரிலோ அல்லது இனங்களின் பெயர்களுடனான அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொரலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போ​தே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளின் பிரதேச மட்ட தலைவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும், எனவே தம்முடைய அடியாட்களை கட்டுபடுத்துமாறும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .