Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
சங்கரிலா ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இருவரே அந்த ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தங்களது உடலில் பொறுத்தியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த இவரும் 20 ஆம் திகதியிலிருந்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளதோடு, ஹோட்டலில் முதலாவது தற்கொலைத் தாக்குதல் அந்த ஹோட்டல் உணவகத்தில் நடைபெற்றுள்ளது.
C-4 வகையைச் சேர்ந்த 25 கிலேகிராம் வெடிமருந்துகளே இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குலை நடத்தியவர்களின் அறையை விமானப் படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் சோதனையிட்டனர்.
இதன்போது, இந்த அறையிலிருந்து ஐபோன் சார்ஜர்களும், சாப்பிடாத கொத்து ரொட்டி பொதி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குண்டுத் தாக்குலுடன் தொடர்புடைய இவரும் இலங்கையர்களா அல்லது வெளிநாட்டவர்களா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த முடியாதுள்ளதோடு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த ஹோட்டல் வளாகம் முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் மறுஅறிவித்தல் வரும்வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்துள்ள வெளிநாட்டவர்கள், நால்வரின் உடல்கள் அந்த ஹோட்டலுக்கு முன்னாள் வைக்கப்பட்டு அடையாள காணும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
57 minute ago
1 hours ago
4 hours ago