2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

சஜித் அணியில் மேலும் இருவர் இராஜினாமா

Editorial   / 2025 மே 25 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்களில் மேலும் இருவர், அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் அசோக சேபால தனது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரொவபொத்தானை அமைப்பாளர் அனுர புத்திக்கவும் தனது அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே, தம்புள்ள பிரதான அமைப்பாளர் சம்பிகா விஜேரத்ன மற்றும் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே ஆகியோர்   ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை (24) அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X