2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சந்தேக நபர் தப்பியோட்டம்; கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்க இதனைக் கூறியுள்ளார்.

பெலியத்த பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நேற்று (07) மதியம் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் தப்பிச்சென்ற போது கடமையில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்க கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X