2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சபைக்குள் குழப்பம்: குழு மீண்டும் கூடுகிறது

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற குழுப்பகரமான நிலைமைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, இன்று (27) மீண்டும் கூடவிருக்கின்றது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான மேற்படி குழுவை, சபாநாயகர் கருஜயசூரிய நியமித்திருந்தார்.

இதேவேளை, ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடமே, இந்தக் குழு இன்றையதினம் விசாரணைகளை மேற்கொள்ளும்.

ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளிநாடா காட்சிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, நாடாளுமன்ற பணியாட்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறென, உயர்நீதிமன்றத்தினால் வழக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவையடுத்து, சபையமர்வு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கூடப்பட்டது. அன்றிலிருந்து 16 ஆம் திகதி வரையிலும் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு, சபைக்குள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .