2025 ஜூலை 17, வியாழக்கிழமை

செம்மணிக்கு அனுமதிக்குமாறு சிறீதரன் கோரிக்கை

Freelancer   / 2025 ஜூலை 16 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் சட்டத்தரணி ஒருவரின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணி இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்வது தொடர்பில் பரிசீலிப்பதாக யாழ்ப்பாணம் நீதிவானால்  அறிவிக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில்

எடுத்துக்கொள்ளப்பட்டபோதே  கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பிரதேசத்துக்குத் தனது பிரசன்னம் முக்கியமானது எனவும், தன்னை அனுமதிக்குமாறும் மன்றில் கோரிக்கை முன்வைத்திருந்தார். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X