2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘சமுர்த்தி கொடுப்பனவு சகலருக்கும் பெற்றுக்கொடுக்கப்படும்’

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிய தகுதிகள் இருந்தும் சமுர்த்தி கொடுப்பனவை பெறாத சகலருக்கும் எதிர்வரும் வாரங்களுக்குள் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்​கை எடுப்பதாக, வீடமைப்பு, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்​தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் போலி புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டு, அதனைப் பயன்படுத்தி எமது நாட்டிலுள்ளவர்கள் வறுமையில் இருப்பதாக, உலக நாடுகளுக்கு  தெரிவித்தனர்.

இதனால் எமது நாடு வறுமை கூடிய நடுத்தர வருமானம் பெறும் நாடாக ​அடையாளங் காணப்பட்டு,  எமது நாட்டுக்கு வழங்கப்பட்ட உதவிகள் நிறுத்தப்பட்டதுடன் உதவிகளுக்கு பதிலாக அதிகரித்த வட்டியின் கீழான கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .