2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சமூக ஊடகங்களை பயன்படுத்தி நிதிமோசடி; பொலிஸார் எச்சரிக்கை

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியாளர் குழுவினால் பொதுமக்களை ஏமாற்றி பணமோசடி செய்யும் சம்பங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களின் ஊடாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி இவர்கள் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி இவ்வாறு நிதிமோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளின் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளில் பரிசு கிடைத்துள்ளதாக அல்லது அதிக பெறுமதியான பொருள் உங்கள் பெயருக்கு அனுப்பட்ட நிலையில் சுங்க திணைக்களத்தில் உள்ளதாக மோசடியாளர்கள் தெரிவிக்கலாம் என, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் தம்மிடம் உள்ள பாரியளவு நிதியை உங்கள் ஊடாக இந்த நாட்டில் முதலீடு செய்யவுள்ளதாகவும் கூறி ஏமாற்ற முயற்சிக்கலாம்.

அத்துடன், இவ்வாறான விடயங்களை நிறைவேற்றுவதற்கு அவர்கள் கூறும் வங்கிக்கணக்கு அல்லது வேறு ஏதேனும் கணக்குளுக்கு பணத்தை வைப்பிடுமாறு பொதுமக்களிட் கோரியுள்ள சந்தர்ப்பங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுப்புக்கூறக்கூடிய நிறுவனங்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளாமல், சந்தேகம் கொள்ளக்கூடியவாறான நபர்கள் அல்லது நிறுவனங்களின் கணக்குகளுக்கு நிதியை வைப்பிலிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X