2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சம்பந்தப்படாதவர்கள் பற்றி பிரதமருடன் ஹக்கீம் பேச்சு

Editorial   / 2019 மே 23 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்படாது, போதிய காரண காரிய தொடர்பின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளவர் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்   குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேலதிக விசாரணைகளுக்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சட்ட ரீதியாக உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியின் ஒரு கட்டமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதென, ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் நிலையங்களின் பி(B) அறிக்கைக்கு அமைய பிணை வழங்கக்கூடிய மட்டத்திலுள்ளவர்களுக்கு, வழக்கு விசாரணை இருக்கத்தக்கதாக பிணையில் விடுவிப்பதற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு பட்டமைக்கான ஆதாரங்கள் எவையும் இல்லாதவர்களை விடுதலை செய்வதற்கும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அதற்கமைவாக சந்தேக நபர்கள் தொடர்பான விளக்கங்களை தெளிவாக வழங்குமாறு கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக கட்சியின் தாருஸ்லாம் தலைமையகத்தில் 011-2436752, 077 2300141 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷாவை - 0777 416920, என்ற இலக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .