2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

சாரதி மாரடைப்பால் மரணம் - பல வாகனங்களுக்கு சேதம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவ - மாட்டாகொட வீதியில், வான் சாரதி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் செலுத்திய வான் பல வாகனங்களுடன் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, பிராடோ ஜீப், வான் மற்றும் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய சாரதியே இதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

இவர் தனது அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு மாட்டாகொடைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

விபத்தில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டாலும், ஏனைய சாரதிகள் காயமின்றி தப்பியுள்ளனர். பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .