2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சர்வதேச அன்னையர் தினம் இன்று

Freelancer   / 2022 மே 08 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை, தியாகம். அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போது அனைவருடைய உள்ளங்களும் உணர்ச்சி மிகுதியால் தழுதழுக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. உலகில் எவராலும் தரமுடியாததை நமக்குத் தரக்கூடியவர் தான் தாய். பிள்ளைகளின் மீது தாய் வைத்திருக்கும் அன்பை அளவிடவே முடியாது. அந்த அன்பு மிகவும் தூய்மையானது.

 எப்போதுமே தமது குழந்தைகள் மீது நிபந்தனையற்ற அன்பை தாய் வைத்திருப்பாள். தம் பிள்ளைகளுக்கும், குடும்பங்களுக்கும் அள்ளித் தரும் அன்பை அளவிடவோ, மதிப்படவோ முடியாது. எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். 

இந்த ஒப்பற்ற பங்களிப்பை மற்றும் அவர்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மே மாதம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5