Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. எனவே இந்தக் கருத்திலிருந்து இந்திய அரசு பின்வாங்கக் கூடாது என்று தி.மு.க தலைவர் முத்துவேல் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
சர்வதேசச் சட்ட விதிமுறைகள் அனைத்தையும் அவமதித்து, இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கடுமையான போர்க் குற்றங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி, அங்கே மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் நடந்தது உண்மை தான் என்று உறுதி செய்ததை அடுத்து, ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30ஆவது கூட்டத்தில், அதன் மனித உரிமை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச கலப்பு நீதி மன்றம் அமைத்து விசாரணை நடைபெற வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
ஆனால், இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை மட்டும் தான் நடத்துவோம் இதிலே
சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களின் யோசனைகளை வேண்டுமானால் ஏற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்து வருகிறது.
வரும் 2016, ஜனவரி மாதத்தில் இந்த உள் நாட்டு விசாரணையைத் தொடங்கப் போவதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.
உள்நாட்டு விசாரணை நடத்தினால், அது பாரபட்சமற்ற, நடுநிலையான, விருப்பு வெறுப்பற்ற விசாரணையாக இருக்காது என்பதாலும்; குற்றம் சாட்டப்பட்டவரே குற்ற விசாரணையை நடத்துவது இயற்கை நீதியையே கேலிப் பொருளாக ஆக்கி விடும் என்பதாலும் தான்; உலகத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன.
இந்திய அரசும் பெரும் பாதிப்புக்காளான தமிழர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டுமென்ற உள்ளார்ந்த எண்ணத்தோடு, சுதந்திரமான, நம்பகத் தன்மையுள்ள சர்வ தேசவிசாரணை வேண்டும் என்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும்.
இந்தியாவே அதற்கானதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன் மொழிய வேண்டுமென்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா முதலாவது வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்த போது, இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தது. அதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமெரிக்க அதிகாரிகள் கொண்ட குழுவுடன் இலங்கைக் குழுவினர் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தற்போது, இறுதியாகத் திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானம் ஒன்றினை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது.
அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைத்த சர்வ தேச நீதிமன்றம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்பதால், அமெரிக்கா ஏற்கனவே மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டினைத் தலைகீழாக மாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடி ஏன் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வ தேச விசாரணை வேண்டும் என்பதிலிருந்து சிறிதும் பின்வாங்கக் கூடாது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் ஒரு முறை அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
4 hours ago