2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சிறை அதிகாரிகளுடன் நீதி அமைச்சர் சந்திப்பு

Simrith   / 2025 ஜூன் 23 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இன்று காலை சிறைச்சாலை ஆணையர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களுடன் நீதி அமைச்சில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

குறிப்பாக களுத்துறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் நெரிசல், மாற்று இடங்களில் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் செயல்முறை உள்ளிட்ட சிறைச்சாலை அமைப்பு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது. சிறைச்சாலைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதும், கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிப்பது  தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினதாச, சிறைச்சாலைகள் பதில் ஆணையர் நாயகம் நிஷான் தனசிங்க, அமைச்சின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .