2025 ஜூன் 25, புதன்கிழமை

சிங்.பொன்னையா காலமானார்

Editorial   / 2019 மே 25 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எம் கிருஸ்ணா, பி .கேதீஸ், எஸ்.சதீஸ்

மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி  அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மாமனாரும் மத்திய மாகாண  சபை முன்னாள் உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான சிங். பொன்னையா என்றழைக்கப்படும் இராமன் சிங்கம் பொண்ணையா, தனது 73ஆவது வயதில், நேற்று (24) இரவு காலமானார்.

இந்தியா, தமிழ்நாட்டிலுள்ள சோலிங்கபுரத்துக்கு, தன்னுடைய பேத்தியின் திருமண வீட்டுக்குச் சென்றிந்த அவருங்கு, அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டமையால், சென்னை தனியார் வைத்தியசாலையொ்னறில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே, நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அமரர் சௌமின் மூர்த்தி தொண்டமான் காலத்தில், பலவருடகாலம் தொழிலுறவு அதிகாரியாக பணியாற்றிருந்தார். பின்னர், மத்திய மாகாண சபை உறுப்பினராக, இரண்டு முறை தெரிவானதோடு, காங்கிரஸை விட்டு விலகி, தொழிலாளர் தேசிய சங்கத்தில் உபதலைவராக பணியாற்றி வந்திருந்தார்.

அனாரின் பூதவுடல், இன்று (25) மாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, ஹட்டனிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டும் என்றும் இறுதிக்கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .