2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட படையினர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக, பொலிஸ் விசேட படையினரை, நாளை  (17) தொடக்கம் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெலிக்கட, மெகசின், கொழும்பு சிறைச்சாலைகளுக்கே, 100 பேர் அடங்கிய பொலிஸ் விசேட படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகளின் வெளிப்புற பாதுகாப்புக்காக இந்த குழுவினர் கடமையில் ஈடுபடுவர் என்றும் சிறைச்சாலைகளின் மதில்கள் ஊடாக பொருள்களை வீசுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .