2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சிறைச்சாலை அதிகாரியின் விடுமுறைத் தொடர்பில் சந்தேகம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் பணிபுரியும் உதவி சிறைச்சாலை  அதிகாரி ஒருவர் கடந்த ஒரு மாதகாலமாக பணிக்கு சமூகமளிக்கவில்லையென சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அதிகாரி பணியில் இருந்து விலகியராகக் கருதி அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வித காரணங்களும் இன்றி சுகயீன விடுமுறையைக் காரணம் காட்டி இவர் பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகட சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது, குறித்த அதிகாரி அங்கு சிறைச்சாலை புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X