2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’சீரற்ற வானிலை தொடரும்’

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நாட்டின் சில மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், இன்று வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இராஜாங்கனை, தெதுருஓயா மற்றும் இரணைமடு ஆகிய நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும்  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் கோரப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது தொடரும் சீரற்ற வானிலையின் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 23,000 குடும்பங்களில் 73,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .