2025 ஜூன் 18, புதன்கிழமை

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமை அதிகரிப்பு

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு கிடைத்த முறைப்பாடுகளில் இத்தகைய முறைப்பாடுகளே அதிகமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுவரை தேர்தலுடன் தொடர்புடைய 1950க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தலுடன் தொடர்புடைய 68க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் முறைகேடு கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரங்களுடன் தொடர்புடைய 1460 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .