Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூறும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, தேசிய பாதுகாப்புதின நிகழ்வு, ஹிக்கடுவ - தெல்வத்த பேரெலிய சுனாமி நினைவுத் தூபி வளாகத்தில், இன்று (26) நடைபெற்றது.
சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்ட தினத்தன்று காலை 6.55 மணியளவில், கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயில், தெல்வத்த - பேரெலிய பிரதேசத்தில், சுனாமி அலையில் சிக்கியதில், அதில் பயணித்த 1,500 பேர் உயிரிழந்தனர்.
சுனாமியால் சேதமடைந்த குறித்த ரயிலின் என்ஜின், ரயில்வே திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டதன் பின்னர், குறித்த என்ஜின் பொருத்தப்பட்ட விசேட ரயில், கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தெல்வத்த- சுனாமி நினைவுத் தூபி வரை, தனது முதல் பயணத்தை, நேற்று காலை 6.30க்கு முன்னெடுத்திருந்தது.
இதனுடன் இணைந்த வகையில், சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
2 hours ago