2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சு.கவின் தொழிலாளர் தினம் கம்பஹாவில்

Editorial   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு, மே மாதம் முதலாம் திகதி கம்பஹா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள அக்கட்சி அறிவித்துள்ளது

கொழும்பு - டார்லி வீதியில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த  அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபாலடி சில்வா மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமது கட்சியின் மே தின நிகழ்வுகளில் கலந்துகொள்ள சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X