2025 ஜூன் 25, புதன்கிழமை

செப்புத் தொழிற்சாலை விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 மே 27 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை தொடர்பான விசாரணை​யை பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, தமது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளதாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியங்க லியனகேயிடம் அறிவித்துள்ளனர்.

மேலும் குறித்த செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10ஆவது சந்தேகநபரான, அப்துல்லா எனப்படும் கருப்பையா ராஜேந்திரனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் பிரியங்க லியனகே உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் ஏனைய 9 சந்தேகநபர்களையும் நாளை தொடக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலத்தைப் வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .