2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சு.க மாநாட்டுக்கு முன்னர் என்ன நடக்கும்? மஹிந்தவின் ஆரூடம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியில் இருந்துகொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவிகளை வகித்துவந்த அனைவரும், சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்;டுக்கு முன்னர்,  அப்பதவிகளிலிருந்து நீக்கப்படுவர் என, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், இன்னும் ஓரிரு நாட்களில், தான் கூறிய விடயம் முழுமையாக நடந்தேறிவிடும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலில், திங்கட்கிழமை (22) இரவு இடம்பெற்றது.

இது தொடர்பில் கருத்துக் கூறிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7