Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே, நீண்ட நாட்களாக இந்நாட்டை ஆட்சி செய்தது. சுதந்திரக் கட்சியானது விழும், விழுந்து விழுந்து எழும், எழுந்து விழும், அவ்வாறான கட்சியான எமது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முதலாவது முழக்கமே இங்கு முழங்கப்பட்டுள்ளது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
'தேர்தலை நடத்தவேண்டாமென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் எழுத்து மூலமாகக் கொடுத்த ஆலோசனையை கணக்கில் எடுக்காமல், அவர் தோல்வியைத் தழுவியவேளையில் சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, நான் எடுத்த முயற்சி தவறா' என்றும் அவர் கேட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 65 ஆவது மாநாடு, குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில், நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது.
ஜனாதிபதிக்கும் கட்சியின் தலைவருக்கும் கௌரவமளித்தல், பொருளாதாரம், தாய் நாட்டைக் காத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அங்கிருந்த ஆதரவாளர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மூழ்கிக் கொண்டிருந்த அதிகாரத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தினேன். எதிர்காலத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும். அதற்கான முதலாவது முழக்கம், குருநாகலிலேயே இன்று இடப்பட்டுள்ளது.
வசதிகளற்ற, வயல்வெளிகளில் நெற்கதிர்களை வெட்டி, நாட்டின் அதியுயர் பதவிக்கு வந்தமையாலா என்னை இந்தளவுக்குத் தூற்றுக்கின்றனர், தாக்குகின்றனர். அல்லது விவசாயின் மகன் என்பதனலா, ஓட ஓட விரட்டுகின்றனர் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இந்தளவுக்கு மக்கள் கூட்டம் இருக்குமென நான் நினைக்கவில்லை. கட்சியைக் கட்டியெழுப்புவதற்குப் பலமுறை முயற்சித்தேன். அம்முயற்சி கைகூடவில்லை. அதனால்தான், கட்சியை காப்பாற்றுவதற்காகக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்.
அதன்போது, எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறான கட்சிகள் எனக்கு ஆதரவளித்தன. அந்த ஆதரவுக்கு மத்தியில், ஜனாதிபதியானேன். ஜனாதிபதித் தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரமே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.
என்னைத் தாக்குகின்றனர். நான் சின்ன மனிதன் என்பதனாலா என்;னைத் தாக்குகின்றீர்கள்? இந்த நாட்டின் ஜனாதிபதிகள் அறுவரில், குடிசையில் வந்த ஒரேயொரு ஜனாதிபதி நானாவேன்.
அடுத்த தேர்தல், அடுத்தாண்டு நடைபெறும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலே நடைபெறும். அத்தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கைச்சின்னத்திலேயே போட்டியிடும். ஆகையால், கட்சியைக் கட்டிக்காப்பதற்கு நினைக்கின்ற சகலரும், சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மீண்டும் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கிலேயே, சுதந்திரக் கட்சியை நான் பொறுப்பேற்றேன். எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே நான், கட்சியைப் பொறுப்பேற்றேன்.
எனக்குக் காலம் வேண்டுமென, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கேட்டேன். தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டு செல்லுமாறு அவர், என்னிடம் தெரிவித்தார்.
நாட்டை நேசிக்கும் நான், எக்காரணத்துக்காகவும், வெளிநாடுகள் நமது நாட்டினுள் தலையிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். அதேபோல, கட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு, அனைவரும் ஒன்றிணையவேண்டும்' என்றும் அவர் அழைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago