2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஜன்னலில் சிக்கிய தலை ; விடிய விடிய தவித்த சிறுமி

Janu   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் ஊழியர்களின் அலட்சியத்தால்  தனித்து விடப்பட்ட சிறுமி, தப்பிக்க முயன்ற போது ஜன்னல் கம்பி இடையே தலை  படுகாயமடைந்துள்ளார்.

ஒடிஷாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பாடசாலை இயங்கி வருகிறதுடன் இங்கு, வெள்ளிக்கிழமை (22) அன்று  வழக்கம் போல் வகுப்புகள் இயங்கின.

பின், மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளதுடன் அங்கு, இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே தூங்கிய நிலையில், அதை கவனிக்காமல் பாடசாலை பூட்டப்பட்டது.

தூங்கி எழுந்த சிறுமி வகுப்பறைக்குள் சிக்கியுள்ளதை அறிந்தவுடன் பதற்றம் அடைந்து ஜன்னல் கம்பி வழியாக வெளியேற முயன்ற போது அவரது தலை இரு கம்பிகளுக்கு இடையே சிக்கியது.

தலையை வெளியே எடுக்க முடியாமல் விடிய விடிய ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கி தவித்ததில் படுகாயமடைந்தார்.

சிறுமி வீட்டுக்கு வராததால் கவலையடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியுள்ளதுடன் சனிக்கிழமை (23) காலை பாடசாலைக்கு சென்றுள்ளனர்.   

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X