Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 06 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான குழுவினருடன் முற்போக்குக் கூட்டணியொன்றை அமைக்கவும் அக்கூட்டணிக்குத் தலைமை வகிக்க வேண்டுமெனவும், அக்கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (06) நண்பகல் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தபா, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, லசந்த அழகியவன்ன, வீரகுமார திசாநாயக்க, துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீயானி விஜேவிக்ரம, மொஹான் லால் கிரேரு, சாந்த பண்டார ஆகியோரே, இந்த வேண்டுகோள் கடிதத்தை, ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago