2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்’

Editorial   / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள ஜனாதிபதித் ​தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ரொய்டர் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் கூறியுள்ளார்.

இத்தேர்தலில், தான் போட்டியிடப்போவது, 100 சதவீதமான உறுதியொன்றும் தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவுடன், பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் புலனாய்வுச் சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலமும் பொதுமக்களைக் கண்காணிப்பதன் மூலமும், பயங்கரவாதம் பரவுவதை நிறுத்தமுடியும் என்றும் தற்போதைய அரசாங்கம், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்றும் இன நல்லிணக்கம், மனித உரிமைகள் பிரச்சினைகள், தனிப்பட்ட சுதந்திரங்களைப் பற்றியே பேசியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .