2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

Editorial   / 2020 மார்ச் 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம் மாதம் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் சாட்சி விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 80 இற்கும் மேற்பட்டோரிடம் 
குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சிகளை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .