Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு 2 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் M.M.B.P.ஹேரத் தெரிவித்துள்ளார்.
முதலாம் மாடி, 5ஆம் மண்டபம், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌதாலோக்க மாவத்தை, கொழும்பு – 7 என்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும்.
அத்துடன், 011 2 677 673 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M. அதிகாரி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
28 minute ago
1 hours ago