2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனத்துக்கு அதிருப்தி

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்படுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமித்தல், சம்பிரதாயமாக வருடத்துக்கு ஒரு தடவை மட்டுமே இடம்பெறும். எனினும், இந்த வருடத்தில் மட்டும் இது இரண்டு தடவைகள் இடம்பெற்றுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள், தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வருட ஆரம்பித்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் 25 பேர் நியமிக்கப்பட்டனர். எனினும், இவ்வாரத்தில் மேலும் 21 பேர், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவதன் காரணமாக, முழு சட்டத்துறையும் விரக்தியடைந்துள்ளதென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .