Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், இந்த விடயத்தால் முஸ்லிம் மக்கள் பெரும் கவலையடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “கொரோனா வைரஸால் நாட்டுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார இழப்புகளைச் சரி செய்வதற்கு நீண்ட நாள்கள் செல்லும். நாங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஆட்சியைப் பிடிப்பதற்காகப் பேசுவதாக கூறினார்கள். ஆனால், நீங்கள் தந்தாலும் நாங்கள் அரசாங்கத்தை ஏற்கப் போவதில்லை” என்றார்.
“எங்களது மார்க்கத்தின் படி ஜனாஸாக்களை எரிக்க முடியாது. முஸ்லிம்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற காரணங்களாலேயே அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்கள் சற்று விலகியிருக்கிறார்கள். 13, 19ஆவது திருத்தச் சட்டங்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டிருக்கிறது. 19ஆவது திருத்ததை கடந்த அரசாங்கத்தில் நாம் கொண்டுவந்திருந்தோம். 19ஆவது திருத்தத்தால் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்புக்களும் இல்லை” எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
51 minute ago