2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

ஜம்போரிக்கு வந்த 20 மாணவர்கள் விபத்தில் சிக்கினர்

Editorial   / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்தவைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ராகம பொலிஸ் பிரிவில் உள்ள படுவத்தே ரயில் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் விபத்துக்குள்ளானது.

படுவத்தே மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஜம்போரி நிகழ்ச்சியிலிருந்து மாணவர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக ​பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் சுமார் 20 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் அதில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்பது பிள்ளைகள் மற்றும் மூன்று பெரியவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து ராகம ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .