Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 04 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா, டி.சுந்தரலிங்கம்,
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையின் மூலம், தனது அமைச்சுக்கு ஆயிரத்து 56 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கடந்த நான்கரை வருடங்களில் கடன் அடிப்படையிலேயே மலையகத்தில் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றை மீள செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில், 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் திட்டத்தின் கீழ் இரண்டு மாடிக் கட்டடம், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இன்று (4) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதைவிடவும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக்கொண்டதே தனது அரசியல் பயணம் என்றும் அதற்கமைவாகவே, தான் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“முதலில் அடிக்கல்லை நாட்ட வேண்டும், கட்டடத்தை நாமே திறந்து வைக்க வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கில் திட்டங்களை உரிய வகையில் செய்யவில்லை. எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும் பயனாளர்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
“பிரச்சினைகளை பேசி, பேசி காலத்தை ஓட்டமுடியாது. நீங்கள் பாடசாலை பிரச்சினையை அறிவித்தீர்கள். இன்று தீர்வை வழங்கினோம். மைதானம் தேவையென கூறினீர்கள். இட ஒதுக்கீடு தொடர்பில் கம்பனியுடன் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு மைதானப் பணியும் ஆரம்பமாகும். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளேன்.
“அதேவேளை, கல்வி என்பது புத்தக படிப்பு மட்டும் அல்ல, அதனையும் தாண்டி பல விடயங்கள் உள்ளன. விளையாட்டு உட்பட பல் துறைகளில் மாணவர்களால் சாதிக்க முடியும் அதேபோல் அமைதி, அமைதி எனக்கூறி மாணவர்களை முடக்காமல், அவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களை உருவாக்கமுடியும்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago