2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஞானசாரருக்கு எதிரான வழக்கு: விலகினார் நீதியரசர்

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக,தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரிப்பதிலிருந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் இன்று  (16) விலகியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜாவால் தாக்கல் செய்யப்பட்ட  மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தவிசாளர் நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக நீதியரசர் நவாஸ் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் உயிரிழந்த முல்லைத்தீவு குருகந்த ரஜமஹா விகாரையின்  விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்ய, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறிய குற்றச்சாட்டு, ஞானசாரர் மீது சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .