2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு

Editorial   / 2019 மே 23 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, பொதுமன்னிப்பளித்து அதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (22) ​மாலை கையொப்பமிட்டுள்ளார்.

அவர் தொடர்பிலான அறிக்கை  சிறைச்சாலைகள் திணைக்களத்தினால்,  நேற்றுமுன்தினம் (21) இரவு அனுப்பப்பட்டிருந்தது,    அந்த அறிக்கையில் தேரரின் சிறை தண்டனை குறித்த தகவல்களும் அவர் சிறைச்சாலைக்குள் நடந்துகொண்ட விதம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அவருக்கு பொதுமன்னிப்பளிப்பதற்காக ஆவணத்தில், ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.

ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட ஆவணம், சிறைச்சாலை திணைக்களத்துக்கு நேற்றுமாலையே அனுப்பிவைக்கப்பட்டது என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .