J.A. George / 2023 ஜனவரி 05 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கமகே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் (SLRC) சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் ‘அரகலய’ செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 13 அன்று, போராட்டக்காரர்கள் அரசுக்கு சொந்தமான ஊடக நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து சிறிது நேரம் ஒலிபரப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, விடுமுறைக்காக டுபாக்கு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இலங்கை திரும்பியுள்ளார்.
14 minute ago
18 minute ago
25 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
25 minute ago
7 hours ago