Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 19 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தேகநபரான கடத்தல்காரர், செஞ்சந்தன கட்டைகள் கொண்ட கொள்கலனை சோதனையின்றி விடுவிக்கும்படி ஒரு டுபாய் சுங்க அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
இதற்காக 50,000 திராம் இலஞ்சம் வழங்குவதாக அவர் குறித்த அதிகாரியிடம் கூறியுள்ளார்.
இந்த இலஞ்ச முயற்சி குறித்து, சுங்க அதிகாரி, தனது மேலதிகாரிக்கு முறையிட்ட போது, இலஞ்சத்தை ஏற்று கொள்கலனை விடுவிப்பது போல பாசாங்கு செய்யுமாறு மேலதிகாரி கூறியுள்ளார்.
தான், 50,000 திராம் போதாது எனவும் 80,000 திராம் தருபடி கேட்க கடத்தல்காரர் சம்மதித்ததாக சுங்க அதிகாரி கூறினார்.
இதன்படி கடத்தல்காரரை கையும் மெய்யுமாகப் பிடிக்க வலைவிரிக்கப்பட்டது.
அடுத்த நாள் இருவரும் சந்தித்தனர். சந்தேகநபர், சுங்க அதிகாரிக்கு உரிய பத்திரங்களையும் இலஞ்சத் தொகைக்கான காசோலையும் கொடுத்தார்.
இதன்போது டுபாய் சுங்க அதிகாரிகள் அவரைப் பிடித்து, பின்னர் பொலிஸாரை தொலைபேசியில் அழைத்துள்ளனர்.
இக்கட்டத்தில் சந்தேகநபர், கழிவறைக்கு செல்லவேண்டியிருப்பதாக பாதுகாவலர்களிடம் கூறியுள்ளார்.
கழிவறைக்குச் சென்றவர் ஜன்னலினூடாகத் தப்பிச் சென்றுவிட்டார்.
இதனால் நீதிபதி முகமட் ஜமால், ஆளில்லா நிலையில் வழக்கை விசாரித்ததுடன், வழக்கை ஒத்திவைத்தார்.
16 minute ago
20 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
32 minute ago
2 hours ago