2025 ஜூலை 05, சனிக்கிழமை

தனமல்வில துப்பாகிப் பிரயோகம்: 3 குழுக்கள் நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனமல்வில பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான விசாரணைகளுக்கு, 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட இடத்திலிருந்த, சி.சி.ரீ.வி கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனமல்வில பகுதியில், நேற்று நண்பகல் 12.20 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 42 வயதான நபரொருவர் உயிரிழந்ததுடன், 22 வயதான இளைஞனொருவர் காயமடைந்தார்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர், பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .