2025 ஜூன் 25, புதன்கிழமை

‘தன்னுடைய நிலைபாட்டில் மாற்றமில்லை’

Editorial   / 2019 மே 26 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில்,  நாடாளுமன்றத் தெரிவுக் குழு எவ்வித தீர்மானத்தை எடுத்தாலும், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக் குறித்த தனது நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென, இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம், பிரிவினைவாதக் குழுவினரை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் ரிஷாட் அரசாங்கத்துக்குள் பொறுப்புகளுடன் இருக்கும் நபர் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறாது என்று நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .