2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 13 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (13) ஆரம்பமாகியுள்ளதுடன், எதிர்வரும் திகதி 17 திகதி வரை நடைபெறவுள்ளது.

பிரதேச சுகாதார பணியாளர்கள் இன்று (13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும்.

சமூக இடைவெளி பேணல், முகக் கவசங்களை அணிதல், தொற்று நீக்கம் செய்துக்கொள்ளல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை வாக்களிப்பின்போது பின்பற்ற வேண்டும்.

இதேவேளை, நாளை (14) நாளை மறுதினம் (15) அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் செயலகம், பொலிஸார், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் வாக்களிக்கலாம்.

குறித்த நாள்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அநுராதபுரம் ராஜாங்கனை பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு  உட்பட்ட பகுதியில் தபால்மூல வாக்களிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கான தபால் வாக்களிப்பு திகதிதேர்தல்கள் திணைக்களத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .