2025 ஜூன் 19, வியாழக்கிழமை

‘தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்         

சிங்கள, தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்டுக்கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர,  நாட்டில் இனவாதப் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாமெனவும் கூறினார்.

இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘’விக்னேஸ்வரன்  உரையை ஏற்றுக்கொண்டு அடைக்கலநாதனும் உரையாற்றுவது கவலையளிக்கிறது.

நாட்டில் மீண்டும் இனவாதப் பிரச்சினைகள் ஏற்படும் வகையிலான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம். நாட்டில் மீண்டும் யுத்தம் நடைபெறக்கூடாது.

நாட்டிலுள்ள அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். வாக்குகளுக்காகவே நீங்கள் இவ்வாறான கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள் என்பது தெரியும். இனவாதம் பேசியே நீங்கள் வாக்குகளைப் பெற்றிருக்கிறீர்கள். செல்வம் அடைக்கலநாதன் கூறுவதுபோல  இந்தியாவுடன் அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை”  எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .