2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘தமிழ் மாணவர்களுக்கு அரபு மொழி கற்பிக்கின்றனர்’

Editorial   / 2019 மே 03 , மு.ப. 10:47 - 1     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

ஈரானிலுள்ள பல்கலைக்கழகத்தின் முகவர்கள் ஊடாக, ஊவா மாணத்தில் அரபு மொழி கற்பிக்கப்படுகின்றது என ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

வெளிவாரி பட்டப்படிப்புக்கான வகுப்புகளை நடத்தும் போர்வையில் 498 தமிழ் மாணவர்களுக்கு, 4 தமிழ் பாடசாலைகளிலேயே அரபு மொழி கற்பிக்கப்படுவதாக அவர் எமது தமிழ்மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

சனி ஞாயிறு தினங்களில் நடத்தப்படும் இந்த வகுப்புகளில், ஆரம்பத்தில் 630 மாணவர்கள் கல்வி கற்ற போதும், முஸ்லிம் மாணவர்கள் 120 பேர், இதிலிருந்து கடந்த வருடம் விலகிவிட்டனர். இந்நிலையில், தற்போதுள்ள 510 மாணவர்களுள் இந்து, கிறிஸ்தவ மாணவர்கள் 498 பேரும் முஸ்லிம் மாணவர்கள் 12 பேருமே கல்விக்கற்கின்றனர் என்றார்.

இந்தப் பட்டப்படிப்பு பாடத்திட்டமானது முதலாவது அரபு பாடமாகவும், இரண்டாவதாக அரசறிவியல் பாடமாகவும், மூன்றாவதாக உலக அரசியல் பாடம் தொடர்பில் கல்வி கற்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் வழங்கிய முறைபாட்டையடுத்தே இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடு குறித்து ஆராய்ந்ததாகவும் இதற்கமையவே பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 1

  • Dharshika Friday, 03 May 2019 10:53 AM

    Don't spread rumors why are u spoiling the life of the students..Im the student of that university and we are not studying arabic as 1st subject..and our parents want us to be a graduate they don't know to spoil our education and even one parent didn't complaint about that stop this rumors

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .