Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜூன் 22 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டைச் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான கப் ரக வாகனத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோதுண்டதில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் 48, 50 வயதுகளையுடையவர்களாவர்.
விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய கப் ரக வாகனத்தின் சாரதியைத் தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago