2025 ஜூன் 25, புதன்கிழமை

“தர்கா டவுன் பிரேக்கிங் நியுஸ்“ வட்ஸ்அப் குரூப்பின் சந்தேகநபர்கள் மூவர் கைது

Editorial   / 2019 மே 26 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 துஷித குமார டீ சில்வா

“தர்கா டவுன் பிரேக்கிங் நியுஸ்“ என்ற பெயரில் 100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கம பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 20, 23 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்தக் குழுவுடன்  தொடர்புடைய மேலும் 25 பேர் இன்று அக்குழுவிலிருந்து உடனடியாக விலகியிருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 3 வருடங்களாக இந்த வட்ஸ்அப் குழு செயற்படுத்தப்பட்டு வருவதுடன், இந்தக் குழுவை உருவாக்கியவர் பல வருடங்களாக வெளிநாட்டில் கடமையாற்றி நாடு திரும்பியவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் 3 நாள்கள் தடுத்து வைத்து, விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .