2025 ஜூன் 18, புதன்கிழமை

‘தலைவர்கள், உறுப்பினர்களை மாற்ற வேண்டாம்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச கூட்டுதாபனங்கள், சபைகள் மற்றும் சட்டரீதியான நிறுவனங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களை மாற்றக் கூடாதென, ஜனாதிபதியின் செயலாளரால், கடிதம் மூலம் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அரச கூட்டுதாபனங்கள், சபைகள் மற்றும் சட்டரீதியான நிறுவனங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள், பணிப்பாளர் சபையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின், அதற்காக ஜனாதிபதியின் இணக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், குறித்த நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் சபை என்பவற்றை, விசேட குழுக்களின் பர​ந்துரைகளின் கீழ்  நியமித்துள்ளாரென்றும், எனவே, சம்பந்தப்பட்ட பதவிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நபர்களை மாற்றாமல், அவர்களை நீண்ட நாள் பணியில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது அவசியம் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .