Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போல, தவ்ஹீத் ஜமா ஆத் அமைப்பையும் தடைசெய்ய வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு, தவ்ஹீத் ஜமா ஆத் அமைப்பே காரணம். ஆகவே இந்த அமைப்பை தடை செய்ய வேண்டுமென, ஜனாதிபதிக்கு சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுக்கும் என்றார்.
"உயிர்த்த ஞாயிறன்று தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும், புலனாய்வு தகவல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
எனினும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை. தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அறிந்திருக்கவும் இல்லை." எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
27 Jun 2025